உள்ளூர் செய்திகள்
தற்கொலை

வெங்கம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2022-05-09 06:20 GMT   |   Update On 2022-05-09 11:22 GMT
வெங்கம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்பாக்கம்:

கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்.கார் மெக்கானிக். இவரது மனைவி ஷோபனா(வயது25). இருவரும் காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நந்தகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஷோபனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News