உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
கடலூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே சி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் செல்வகுமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வந்தார்.
கடந்த ஒரு மாதமாக செல்வகுமார் கல்லூரிக்குப் போகாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று மழவராயநல்லூர் பகுதியிலுள்ள முந்திரி தோப்பில் திடீரென்று புடவையில் தூக்கு மாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்வகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.