உள்ளூர் செய்திகள்
பஸ்சை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
பஸ்சை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது27).ஆம்னி பஸ் டிரைவர். இவர் நேற்று மாலை வானகரம் பஸ் நிறுத்தம் அருகே ஆம்னி பஸ்சை நிறுத்தி விட்டு மோட்டார் எந்திரம் மூலம் பஸ்சை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.