உள்ளூர் செய்திகள்
விவசாய தொழிலாளி- முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
ராஜபாளையம் அருகே விவசாய தொழிலாளி-முதியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர்.
ராஜபாளையம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வடக்கு பாளையத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 45), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த சில வாரங்களாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் வேலை பார்த்த அருள் மதியம் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள விவசாய கிணற்றில் கை கால் கழுவ இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அருள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் குருசாமி (70). குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசி த்து வரும் இவர் சம்பவத்தன்று சேத்தூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.