உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள அருள்புதூரைச் சேர்ந்தவர் மேரி (வயது 40). இவரது தம்பி பாக்கியராஜ் (38). இவர் கடந்த 30ந்தேதி தலையில் காயங்களுடன் ரோட்டில் இறந்து கிடந்தார்.
விபத்தில் பாக்கியராஜ் இறந்து இருக்கலாம் என கருதி உறவினர்கள் அவரது உடலை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று 3ம்நாள் சடங்கு நிகழ்ச்சிக்காக வீடு சுத்தம் செய்யப்பட்டது. அப்போது வீட்டில் ரத்தக்கறையை துடைக்க அடையாளங்கள் தென்பட்டன. அதிர்ச்சி அடைந்த மேரி இதுதொடர்பாக தளவாய்புரம் போலீசில் புகார் செய்து ள்ளார்.
அதில், எனது தம்பி பாக்யராஜ் சாவில் சந்தேகம் உள்ளது. மூத்த சகோதரர் அந்தோணிராஜ்க்கும், தம்பி பாக்கியராஜ்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே பாக்யராஜ் மரணத்தில் அந்தோணிராஜ்க்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்தபுகாரின் அடிப்படையில் தளவாய்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.