உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஆதம்பாக்கத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-05-04 09:03 GMT   |   Update On 2022-05-04 09:03 GMT
ஆதம்பாக்கத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் சாரங்கபாணி (வயது75). வந்தவாசியை சேர்ந்த இவர் வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சரி இல்லாததாலும் மகன் வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக சாரங்க பாணிக்கும், அவருடைய மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் வீட்டின் மாடிப்படிக்கட்டின் கீழ் உள்ள கழிவுநீர் குழாயில் சாரங்கபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன், ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாரங்கபாணி, தன்னுடைய மகன் துன்புறுத்துவதாக ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாரங்கபாணி தற்கொலை செய்து உள்ளார்.

இது தொடர்பாக அவரது மகனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News