உள்ளூர் செய்திகள்
தனியார் தொழிற்சாலையில் சமூக விரோத செயல்கள்- கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
கடலூர் துறைமுகம், தைக்கால் தோணித்துறை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர்:
கடலூர் துறைமுகம், தைக்கால் தோணித்துறை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,
கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை அருகில் தனியார் கெமிக்கல் கம்பெனி நிறுவனத்தில் சுற்றுசுவர் மழைக்காலத்தில் விழுந்து விட்டது. இதன்மூலம் சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி உட்புறம் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் மர செடிகளை தீ வைத்து கொளுத்தி விட்டனர். அதில் உள்ள விஷ பாம்புகள் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்துகின்றது. இரவு நேரங்களில் ஊரிலுள்ள மக்கள் யாரும் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
கடலூர் துறைமுகம், தைக்கால் தோணித்துறை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,
கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை அருகில் தனியார் கெமிக்கல் கம்பெனி நிறுவனத்தில் சுற்றுசுவர் மழைக்காலத்தில் விழுந்து விட்டது. இதன்மூலம் சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி உட்புறம் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் மர செடிகளை தீ வைத்து கொளுத்தி விட்டனர். அதில் உள்ள விஷ பாம்புகள் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்துகின்றது. இரவு நேரங்களில் ஊரிலுள்ள மக்கள் யாரும் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.