உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் திடீர் மழை- வெப்பம் தணிந்தது
காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பெய்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
கோடை வெயில் தொடங்கி அதிக அளவு வெப்பத்தால் மக்கள் தவித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் 111 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது
இதனால் குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இடி, மன்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கன மழை பெய்தது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. இதேபோல் தாமல், பாலுசெட்டி சத்திரம், கீழ் அம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட் பகுதியில் மழை பெய்தது.
நள்ளிரவில் பெய்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். எனினும் இன்று காலை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.