உள்ளூர் செய்திகள்
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவிகள் உள்பட 60 பேர் படுகாயம்
சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்றபோது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கியது.
மயிலாடுதுறை:
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக பாண்டிச்சேரிக்கு சுமார் 65 பயணிகளுடன் நேற்று இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 60 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்த காரணமாக சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.