உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேக தினவிழா நடந்தது.

லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக தினவிழா

Published On 2022-04-29 09:54 GMT   |   Update On 2022-04-29 09:54 GMT
எருக்கூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக தினவிழா நடைபெற்றது.
சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள எருக்கூரில் லெட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலை இதே ஊரில் பிறந்து வளர்ந்து பல வருடங்கள் சிறைத்த ண்டனை பெற்று வெளியே வந்து வாழ்க்கையின் இறுதிகாலத்தில் பிரம்மச்சா ரியாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் நீலகண்டபிரம்மச்சாரி தனது குழந்தை பருவத்தி லிருந்து இளமைப்பருவம் வரை வழிபட்ட கோயிலும் இதுவே ஆகும். 

இக்கோயிலில் முதல் வருட கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முன்பு சிறப்பு யாகமும், அதனைத்தொடர்ந்து நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கிராம மக்கள் சார்பில் எருக்கூர் சுப்பிரமணிய ஐயர் செய்திருந்தார்.
Tags:    

Similar News