உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

வேலைவாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன ஆணை

Published On 2022-04-29 14:29 IST   |   Update On 2022-04-29 14:29:00 IST
வேலைவாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அரியலூர்:
 
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ் தொடக்கி வைத்து பேசுகையில், வேலைநாடுவோர் அனைவரும் தனித் திறனை வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

முகாமில், 11 தனியார் நிறுவனங்கள் மற்றறும் 3 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு,  திறமையான 54 பேரை தேர்தெடுத்து அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

மேலும் 32 பேர் திறன் பயிற்சி பெற விரும்பம் தெரிவித்தனர்.முகாமில் 243 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

Similar News