உள்ளூர் செய்திகள்
உட்கட்சி தேர்தல் விவகாரம்- கடலூர் தேவனாம்பட்டினத்தில் தி.மு.க.வினர் மோதல்
உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தி.மு.க.வினர் மோதிக்கொண்டதையடுத்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
தி.மு.க. சார்பில் தற்போது வார்டு செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த உதயன் (வயது 41) என்பவர் வார்டு செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. வார்டு செயலாளர் உதயவாணன் சம்பவத்தன்று உதயனிடம் எனக்கு வழங்க உள்ள வார்டு செயலாளர் பதவியை பறிக்க எண்ணுகிறாயா? எனக்கூறி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த உதயன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தி.மு.க. சார்பில் தற்போது வார்டு செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த உதயன் (வயது 41) என்பவர் வார்டு செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. வார்டு செயலாளர் உதயவாணன் சம்பவத்தன்று உதயனிடம் எனக்கு வழங்க உள்ள வார்டு செயலாளர் பதவியை பறிக்க எண்ணுகிறாயா? எனக்கூறி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த உதயன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.