உள்ளூர் செய்திகள்
தீ விபத்து

கடலூர் அருகே தீ விபத்து- கடை, வீடு எரிந்து சாம்பல்

Published On 2022-04-27 14:35 IST   |   Update On 2022-04-27 14:35:00 IST
கடலூர் அருகே ஒரே பகுதியில் கடை மற்றும் வீடு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை திடீரென்று கூரைவீட்டில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரியத் தொடங்கியது.

இதனைப் பார்த்த சரஸ்வதி வீட்டில் இருந்து அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியாததால் நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரது பங்க் கடை கீற்றுக் கொட்டகையில் திடீர் என தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரே பகுதியில் கடை மற்றும் வீடு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News