உள்ளூர் செய்திகள்
கடத்தல்

கடலூர் அருகே பெண்ணை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2022-04-27 09:00 GMT   |   Update On 2022-04-27 09:00 GMT
கடலூர் அருகே பெண்ணை கடத்திய வாலிபர் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கடலூர்:

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). இவரது வீட்டுக்கு அருகே பிரியாணி கடையில் புதுச்சேரி மாநிலம் அரியூர் சேர்ந்த தயாநிதி (வயது 25) என்கிற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று விஜயலட்சுமி, தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் விஜயலட்சுமி வந்த போது தயாநிதி வழி மறித்து வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை கடத்தி சென்ற தயாநிதியைதேடி வருகின்றனர்.
Tags:    

Similar News