பண்ருட்டியில் ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 200 வீடுகள் இடிப்பு
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி களத்து மேடு ஏரியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 200 வீடுகள் இடிக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கியது.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பரமணியம் உத்தரவுபடி பண்ருட்டி தாசில்தார் சிவா.கார்த்திகேயன், பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
எந்தவித அசாம்பாவித சம்பவங்கள் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி நகர மின் வாரிய பணியாளர்கள் இடித்த வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை அகற்றினர். வீடு இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மாற்று இடம், வீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாசில்தார் சிவா. கார்த்திகேயன் தெரிவித்தார்.