உள்ளூர் செய்திகள்
காட்பாடி பிரம்மபுரத்தில் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை
காட்பாடி பிரம்மபுரத்தில் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் காட்பாடி பிரம்மபுரம் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் விஜய் (வயது26). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இன்று காலை பிரம்மபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் முன்பு பாய்ந்து விஜய் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த விஜயின் உறவினர்கள் உடலை மீட்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விஜயின் உறவினர்கள் பிரம்மபுரம் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரம்மபுரத்தில் நேற்று கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அங்கிருந்த விஜயை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கினார். இதனால் அவமானம் அடைந்த விஜய் இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதனால் காட்பாடி திருவலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்பாடி டி.எஸ்.பி.பழனி, இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாலிபர் தற்கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளியுங்கள். அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் காட்பாடி பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் காட்பாடி பிரம்மபுரம் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் விஜய் (வயது26). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இன்று காலை பிரம்மபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் முன்பு பாய்ந்து விஜய் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த விஜயின் உறவினர்கள் உடலை மீட்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விஜயின் உறவினர்கள் பிரம்மபுரம் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரம்மபுரத்தில் நேற்று கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அங்கிருந்த விஜயை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கினார். இதனால் அவமானம் அடைந்த விஜய் இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதனால் காட்பாடி திருவலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்பாடி டி.எஸ்.பி.பழனி, இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாலிபர் தற்கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளியுங்கள். அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் காட்பாடி பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.