உள்ளூர் செய்திகள்
திருட்டு

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-04-24 16:32 IST   |   Update On 2022-04-24 16:32:00 IST
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள செம்பளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 55). இவர் சம்பவத்தன்று பாஸ்கர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை விருத்தாசலம் ஜங்‌ஷன் சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்குச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்த பாஸ்கர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News