உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்.

வாணியம்பாடியில் 24 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-04-24 09:47 GMT   |   Update On 2022-04-24 09:47 GMT
வாணியம்பாடியில் 24 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி:

சென்னை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டாலின்  உத்திரவுப்படி, வேலூர் மண்டல இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன், போலீசார் ஆகியோர் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட  பயணிகள் ஆட்டோ வாகனத்தில் சுமார் 1200 கிலோ  ரேசன் அரிசியை (24மூட்டைகள்) ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏற்றி சென்றபோது பிடிபட்டார்.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக் கப்பட்டது.
Tags:    

Similar News