உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளி கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி, மனைவி மற்றும் 14 வயது மகளுடன் ஓசூரில் தங்கி ஓட்டலில் வேலை செய்தார். அப்போது அந்த சிறுமிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறுமியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓசூரில், அதே ஓட்டலில் பணிபுரிந்த திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் சூர்யா என்பவரால் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது.
இதுபற்றி பெற்றோர் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து சூர்யாவை கைது செய்தனர்.
சிறுமியிடம் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியின் உறவினர்கள் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து உறவினர்கள் 2 பேரை பிடித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி, மனைவி மற்றும் 14 வயது மகளுடன் ஓசூரில் தங்கி ஓட்டலில் வேலை செய்தார். அப்போது அந்த சிறுமிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறுமியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓசூரில், அதே ஓட்டலில் பணிபுரிந்த திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் சூர்யா என்பவரால் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது.
இதுபற்றி பெற்றோர் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து சூர்யாவை கைது செய்தனர்.
சிறுமியிடம் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியின் உறவினர்கள் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து உறவினர்கள் 2 பேரை பிடித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.