உள்ளூர் செய்திகள்
வேலூர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-22 15:57 IST   |   Update On 2022-04-22 15:57:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்:


வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் சிம்பு தேவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 

சிறப்பு அழைப் பாளராக மாநில துணை தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்ட தொகுப்பு களை செயல்படுத்த கூடாது. 

கட்டிட, ஆட்டோ உடலுழைப்பு வாரியங்களை பாதுகாத் திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தியும், முதலாளிகளுக்கு ஆதரவாக அவசரமாக செயல்படுத்தும் தமிழக தொழிலாளர் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News