உள்ளூர் செய்திகள்
மாயம்

சிதம்பரம் அருகே கர்ப்பிணி பெண் மாயம்

Published On 2022-04-22 15:42 IST   |   Update On 2022-04-22 15:42:00 IST
சிதம்பரம் அருகே கர்ப்பிணி பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே தில்லை போலீஸ் சரகம் கலைஞர்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சந்தியா (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது சந்தியா மீண்டும் கர்பமாக உள்ளார். கடந்த 19-ந் தேதியன்று ஆஸ்பத்திரிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்ற சந்தியா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியாவை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரது கணவர் மாரியப்பன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடிவருகின்றனர்.

Similar News