உள்ளூர் செய்திகள்
போராட்டம்

சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2022-04-22 14:44 IST   |   Update On 2022-04-22 14:44:00 IST
சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் அரசாணை படி தற்போது பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு போராட்டங்களை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்றும் மாணவர்கள் போராட்டம் தொடருகிறது. தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் செய்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Similar News