உள்ளூர் செய்திகள்
அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி
நாகை அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு வனத்துறை, அன்பு டிரஸ்ட் ஆகியவை சார்பில் மூலிகை கண்காட்சி நாகை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
தமிழக பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசகம் தலைமை வகித்தார்.
அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். நாகை பாரதிதாசன் அரசு கல்லு£ரி பேராசிரியர் சிவக்குமார், அன்பு டிரஸ்ட் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சித்த மருத்துவம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், சித்த மருத்துவம் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்-கப்பட்டது.
நேற்று நடந்த கண்காட்சியில் நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.