உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி வியாபாரிகள் போராட்டம்

Published On 2022-04-21 15:35 IST   |   Update On 2022-04-21 15:35:00 IST
ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணாசிலை அருகில் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி வியாபாரிகள் ஒன்றிணைந்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் நகரமாக விளங்குகிறது.

பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் 2-வது பெரிய நகரமாக ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க கோரி முன் வைத்து ஆரணி சேத்துபட்டு, கண்ணமங்கலம், பெரணமல்லூர் ஜமுனாமுத்துர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து சங்க வியாபாரிகள் ஒன்றுணைந்து அரசின் போராட்டத்தில் ஈடுபட்டடனர். 

ஆரணியை தலையிடமாக கொண்டு மாவட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200&க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Similar News