உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் அருகே இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு- 4 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே இளநீர் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இளநீர் வியாபாரி. இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்ற நாடகத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் தனசேகரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது கை, கால், கழுத்து, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவி, கார்த்திக், சந்தானம், அஜித், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இளநீர் வியாபாரி. இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்ற நாடகத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் தனசேகரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவரது கை, கால், கழுத்து, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரவி, கார்த்திக், சந்தானம், அஜித், ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.