உள்ளூர் செய்திகள்
ஆரணி அருகே கிணற்றில் நிர்வாண நிலையில் வாலிபர் பிணம்
ஆரணி அருகே கிணற்றில் நிர்வாண நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் நெடுஞ்சாலை அருகில் பாழடைந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கதக்க நிர்வாண நிலையில் வாலிபர் சடலம் இருப்பதாக ஆரணி தீயணைப்பு துறை மற்றும் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளன.
ஆரணி தீயணைப்பு துறையினர் சம்பவடத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் நிர்வாண நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு எடுத்தனர்.
இதனையடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாழடைந்த கிணற்றில் சுமார் 40வயது மதிக்கதக்க வாலிபர் யார் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்-பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலை சாலையில் உள்ள பாடைந்த கிணற்றில் வாலிபர் நிர்வாண நிலையில் உள்ள சடலம் இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.