உள்ளூர் செய்திகள்
கேத்ரின் நீர்வீழ்ச்சி

கோத்தகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-04-18 15:23 IST   |   Update On 2022-04-18 15:23:00 IST
சுற்றுலா பயணிகள் கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஊட்டி: 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சமவெளி பகுதிகளில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு கீழே வரும் சுற்றுலா பயணிகள் வரும் கோத்தகிரி வழியாக தான் மேட்டுப்பாளையம் வருவார்கள். 

அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா மற்றும் கொடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சிக்கு செல்வார்கள். தற்போது 4 நாட்கள் விடுமுறை காரணமாக கேத்ரின் நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. 

நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமா காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

Similar News