உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு

Published On 2022-04-17 14:13 IST   |   Update On 2022-04-17 14:13:00 IST
வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடமானை மீட்டு அருகில் உள்ள கோட்டமலை வனப் பகுதியில் விடுவித்தனர்.
ஊட்டி: 

கூடலூர் வனக் கோட்டம், சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள கண்ணம்பள்ளி காவல் பகுதிக்கு உள்பட்ட நெல்லிக்குன்னு பகுதியில் சுமார் 2 வயதுடைய   ஆண் கடமான் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடமானை மீட்டு அருகில் உள்ள கோட்டமலை வனப் பகுதியில் விடுவித்தனர். 

Similar News