உள்ளூர் செய்திகள்
விபத்து

விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-04-16 14:45 IST   |   Update On 2022-04-16 14:45:00 IST
விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சின்ன குட்டி மூளை பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 70). இவர் நேற்று இரவு கோட்டிமேடு அருகே சிதம்பரம்-விருத்தாசலம் செல்லும் சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்ட இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது கலியபெருமாள் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News