உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடங்கியது

Published On 2022-04-16 13:03 IST   |   Update On 2022-04-16 13:03:00 IST
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் பெய்த மழை காரணமாக, ஓசூர் பகுதியில் பசுமை குடில்கள் நாசமாகின. கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து துவங்கியது.
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 13 ந் தேதி மாலை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கிருஷ் ணகிரியில் 27.30 மி.மீ., ஓசூரில், 18.6, நெடுங்கல் பகுதியில், 12, பாரூரில், 10.2, தேன்கனிக்கோட்டையில், 10, சூளகிரியில், 9, அஞ்செட்டியில், 5.4, தளியில், 5, போச்சம்பள்ளியில், 4.2, ராயக்கோட்டையில், 2, ஊத்தங் கரையில், 1 மி.மீ., என மாவட்டம் முழுவதும், 104.7 மி.மீ., மழை பதிவானது. 

நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்த தால், குடிசா கனப் பள்ளி, பாக லூர், குடி செட்லு, பேரிகை, கெல மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், ரோஜா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் மற்றும் குடைமிளகாய் போன்ற தோட்டங்களுக்கு அமைக் கப்பட்டிருந்த, பசுமை குடில்கள் கிழிந்து நாச மாகின.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்த ஆண்டில் 3 முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. நேற்று அணைக்கு, 90 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 114 கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப் பட்டுள்ளது.

Similar News