உள்ளூர் செய்திகள்
கோகிலா.

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2022-04-13 13:59 IST   |   Update On 2022-04-13 13:59:00 IST
அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்.
அம்மாபேட்டை:

அம்மா பேட்டை அருகே விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்.

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் அடுத் துள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுந்தரராசன். இவரது மகள் கோகிலா (38). 

இவருக்கும் ஊமாரெட்டி யூரை சேர்ந்த அப்புசாமி மகன் வேல்முருகன் (40) என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மதுவதனி (12) என்ற மகளும், தமிழ் நிதின் (3) என்ற மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று வேல்முருகன் வீட்டில் எதிரில் உள்ளவர் கோகிலா வின் தாய் ஜெயம்மாளுக்கு போன் செய்து தங்கள் மகள் வீட்டில் ஏதோ பிரச்சனை போல் இருக்கிறது இங்கே சத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயம்மாள் விசாரித்த போது தனது மகள் கோகிலா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாகவும் அவரை அந்தியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெயம்மாள் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.

அதில் அவர் வேல்முருக னுக்கு, கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கோபித்து கொண்டு தனது வீட்டுக்கு வந்து விடுவார் எனவும்,

நாங்கள் சமாதானப்படுத்தி மீண்டும் தனது அவரது கணவர் வீட்டுக்கு சென்று விட்டு விடுவோம் எனவும் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச் சலில் இருந்த கோகிலா வீட்டில் இருந்து பூச்சி மருந்தை எடுத்து குடித்து ள்ளார். மேலும் சாவில் சந்தேகம் இருப்பதாக உண்மை நிலையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

இறந்த கோகிலாவின் உடல் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News