உள்ளூர் செய்திகள்
வீட்டில் மதுவை பதுக்கி விற்ற 3 பேர் கைது
வீட்டில் மதுவை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
வீட்டில் மதுவை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சூளை அருகே உள்ள ஒரு வீட்டில் சிலர் மதுவை பதுங்கி விற்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஜெயமுருகன் தலைமையில் போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை செய்தபோது அங்கு 710 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.26 ஆயிரம் ஆகும். இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெரிய சேமூர் பகுதியை சேர்ந்த சரவணன் (36), புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த முருகேசன் (41), தஞ்சாவூரை சேர்ந்த ரங்கதுரை (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் இவர்கள் சூளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.