உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பண்ருட்டி அருகே எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை

Published On 2022-04-11 16:44 IST   |   Update On 2022-04-11 16:44:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எலி மருந்தை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. செங்கல் சூளை நடத்திவருகிறார். இவரது மகள் தமிழ்செல்வி (வயது 23). கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார்.

சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு தமிழ்செல்வி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தமிழ்செல்வி உயிரிழந்தார்.

இது குறித்து வேலு தந்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News