உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே நர்சிங் படிக்க முடியாத சோகத்தில் இளம்பெண் தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நர்சிங் படிக்க முடியாத சோகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவருக்கும் மோனிசா (வயது 20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிசாவுக்கு நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தன்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது என ஆதிகேசவன் மறுத்துவந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிகேசவன் தனது அக்காள் வீட்டு விஷேசத்துக்கு நகைகள் வாங்கி கொடுத்தார். இதில் மனமுடைந்த மோனிசா தன்னை படிக்க வைக்க செலவு செய்யாத கணவர் அவரது அக்காள் வீட்டுக்கு செலவு செய்கிறாரே என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆதிகேசவன் கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவருக்கும் மோனிசா (வயது 20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிசாவுக்கு நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தன்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது என ஆதிகேசவன் மறுத்துவந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிகேசவன் தனது அக்காள் வீட்டு விஷேசத்துக்கு நகைகள் வாங்கி கொடுத்தார். இதில் மனமுடைந்த மோனிசா தன்னை படிக்க வைக்க செலவு செய்யாத கணவர் அவரது அக்காள் வீட்டுக்கு செலவு செய்கிறாரே என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆதிகேசவன் கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.