உள்ளூர் செய்திகள்
இறந்து கிடந்த மயில்

செய்யாறில் வீதியில் இறந்து கிடந்த மயில்

Published On 2022-04-10 14:20 IST   |   Update On 2022-04-10 14:20:00 IST
செய்யாறில் வீதியில் இறந்து கிடந்த மயில் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்யாறு:

செய்யாறு டவுன் பெரிய தெருவில் மணி என்பவர் வீட்டு காலி இடத்தில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதனைகண்டு அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

செய்யாறு சரக வனவர் பாபு சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  யாராவது மயிலை கொன்று வீசி இருப்பார்களா? அல்லது நோய் வாய்ப்பட்டு  இறந்ததா? என ஆய்வு செய்தார்.

இறந்த மயிலை பிரேத பரிசோதனை செய்து வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர். 

Similar News