உள்ளூர் செய்திகள்
கடலூரில் வீடுகளில் குடிநீரை உறிஞ்சிய மின் மோட்டார்கள் பறிமுதல்
10-க்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் அதிகமான தண்ணீரை எடுத்து வந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள கூத்தப்பாக்கம் பகுதிகளில் வீட்டு குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் அளவுக்கு அதிகமாக எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக சக்தி நகர், பங்காரு ராஜா நகர், விஜய லட்சுமி நகர், பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டுக் குடிநீர் குழாயில் மின்மோட்டார் பயன்படுத்துவதாக ஊராட்சிமன்றத் தலைவர் ஜல்லி சரவணனுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்களும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் அதிகமான தண்ணீரை எடுத்து வந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.அதோடு வீட்டு உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.