உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கடலூர் முதுநகரில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-04-07 10:08 GMT   |   Update On 2022-04-07 10:08 GMT
கடலூர் முதுநகரில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் முதுநகர் வசுந்தராயன் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25)கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெங்கடேசனுக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தினால் தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த பாதிப்பு முழுமையாக சரியாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வெங்கடேசன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கடலூர் முதுநகர் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் நேரில் வந்து வெங்கடேசன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News