உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணியில் கஞ்சா வியாபாரி 3 பேர் கைது

Published On 2022-04-06 15:17 IST   |   Update On 2022-04-06 15:17:00 IST
ஆரணியில் கஞ்சா வியாபாரி 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பையூர், சேவூர், வடுகசாத்து, சந்தவாசல், நடுக்குப்பம், கண்ணமங்கலம், கொங்கராம்பட்டு, காட்டுகாநல்லூர், ஒண்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் கஞ்சா புகைப்பது எப்படி என்று வீடியோ பதிவு செய்து சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சிய டைந்தனர்.

இதனையடுத்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆரணி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையிலான போலீசார் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பையூர் குன்னத்தூர் பகுதியில் சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News