உள்ளூர் செய்திகள்
சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் போக்சோவில் கைது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சத்தியமூர்த்தி (வயது 19).
இவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, கைப்பேசி எண் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சத்தியமூர்த்தியை கண்டித்து அனுப்பியுள்ளனார்.
இருப்பினும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் சிறுமியின் பெற்றோர் கை.களத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சத்தியமூர்த்தி (வயது 19).
இவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, கைப்பேசி எண் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சத்தியமூர்த்தியை கண்டித்து அனுப்பியுள்ளனார்.
இருப்பினும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் சிறுமியின் பெற்றோர் கை.களத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.