உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

கானாத்தூர் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-04-05 14:50 IST   |   Update On 2022-04-05 14:50:00 IST
கானாத்தூர் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூர் கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த். இவரது நண்பர் சுடலை முத்து. சாப்ட்வேர் என்ஜினீயர்களான இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

கானாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் வீரமணி மீதும் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களில் சுடலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் வீரமணி, வாலிபர் அரவிந்த் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக கானாத்தூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்தது எப்படி? என்பது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News