உள்ளூர் செய்திகள்
வாலிபர் கால் முறிந்தது

வழிப்பறி வழக்கில் கைது- போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது வாலிபரின் கால் முறிந்தது

Published On 2022-04-05 13:08 IST   |   Update On 2022-04-05 13:08:00 IST
திருப்போரூர் அருகே வழிப்பறி வழக்கில் கைதானவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது.
திருப்போரூர்:

திருப்போரூர் அடுத்த வெங்கூரில் நடந்த வழிப்பறி வழக்கில் பழைய குற்றவாளியான கரும்பாக்கம், ராயல்பத்து கிராமம், முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (39) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருப்போரூர் அருகே பதுங்கி இருந்த முருகனை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென முருகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இதில் தவறி விழுந்ததில் முருகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Similar News