உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உதவி- வழங்கல்

Published On 2022-04-03 14:44 IST   |   Update On 2022-04-03 14:44:00 IST
பெரம்பலூர் அருகே வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ பிரபாகரன் ஆறுதல் கூறி நிவாரண நிதி உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே மேலப்புலியூர் கிராமத்தில் செல்வக்குமார், புகழேந்தி ஆகிய இருவர்களது வீடுகளிலும் மின் கசிவு ஏற்பட்டு கூரை வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ. பிரபாகரன்  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி

நிவாரண நிதியாக தலா ரூ.20ஆயிரம் மற்றும்  அரிசி, வேட்டி,சேலை, பாய், போர்வை உள்ளிட்ட நிவராண பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News