உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வெம்பாக்கத்தில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

Published On 2022-04-03 13:53 IST   |   Update On 2022-04-03 13:53:00 IST
வெம்பாக்கம் அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு:

வெம்பாக்கம் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி காஞ்சனா (வயது 61). விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். 

இவர் கடந்த மாதம் 24-ந் தேதி மாலை வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து. 

இதில் உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News