உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,366 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணம்- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,366 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு ஷ்ஷ்ஷ்.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசோதிக் கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1,665 மனுக்கள் பெறப்பட்டு 1,366 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 115 மனு இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக் கப்பட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ந் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் சமர்ப் பிக்க வேண்டும். அதாவது வருகிற மே மாதம் 18-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த மார்ச் 20-ந் தேதி முதல் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
இந்த கால கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொன்றாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தேர்வு செய்யும்.
எனவே கொரோனா தொற்று காரணமாக இறந்தவரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.