உள்ளூர் செய்திகள்
கடமானை வேட்டையாடி நடுரோட்டில் போட்ட செந்நாய்கள் கூட்டம்

கூடலூர் அருகே கடமானை வேட்டையாடி நடுரோட்டில் போட்ட செந்நாய்கள் கூட்டம்

Published On 2022-04-01 16:25 IST   |   Update On 2022-04-01 16:25:00 IST
மசினகுடி- ஊட்டி சாலையில் மாவனல்லா அருகே, 25-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தன. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு பார்த்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், மான், கரடி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது.

மசினகுடி- ஊட்டி சாலையில் மாவனல்லா அருகே, 25-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தன. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு பார்த்தனர்.

அப்போது சில செந்நாய்கள் காட்டிற்குள் இருந்து கடமானை தரதரவென இழுத்து சாலைக்கு கொண்டு வந்தன. பின்னர் நடுரோட்டில் போட்டு விட்டு கடமானை சுற்றி வந்து அதனை தின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகளும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மக்கள் செந்நாய் அருகே சென்று விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இதனை வீடியோவாகவும் எடுத்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Similar News