உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வெம்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலி

Published On 2022-03-31 09:52 GMT   |   Update On 2022-03-31 09:52 GMT
வெம்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரத மனைவி சாந்தி (வயது 34) இன்று அதிகாலை மாங்கால் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதி இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

தகவல் அறிந்த தூசி போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News