உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

குன்னம் அகரம்சீகூரில் முதியவர் மர்ம சாவு

Published On 2022-03-30 13:57 IST   |   Update On 2022-03-30 13:57:00 IST
அகரம்சீகூரில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து வயது 65. இவரது மனைவி வசந்தா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில்  இறந்துவிட்டார். இவரது ஒரே மகளுக்கு  திருமணம் ஆகிவிட்டது. வீரமுத்து வீட்டில் தனியாக வசிந்து வந்தார்.  

இந்நிலையில் நேற்று மாலை வீரமுத்துவின் உறவினர்  நக்கம்பாடியில் இறந்து விட்டதால், இது குறித்து தகவல் சொல்ல வீரமுத்துவின் தம்பி மகன் வீட்டிற்கு வந்தார்.

அங்கு வீரமுத்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கதவு திறந்து கிடந்தது. மேலும் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் விரைந்து  சென்று வீரமுத்துவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீரமுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News