உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேத்துப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தேவிகாபுரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.