உள்ளூர் செய்திகள்
பாகூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல் பட்டு அட்டகுளம் பகுதியில் உள்ள சிமெண்ட் களத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் நாலாபுறமும் தெரித்து ஓடினர்.
இதில் உஷாரான போலீ சார் தப்பியோடியர்களை விரட்டினர். இதில் 4 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தனர்.
விசாரணையில் அவர்கள் மேல்பரிக்கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சர்வேஸ்வரன் என்ற அப்பு (வயது 28) அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (32)பாகூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (42), பழைய காமராஜ் நகரை சேர்ந்த கதிரவன் (32) என்பது தெரியவந்தது. பொது இடத்தில் கால்நடையான சேவலை வைத்து சூதாடிய தாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.