உள்ளூர் செய்திகள்
முகாம்

பட்டா கணினி திருத்த முகாம்

Published On 2022-03-24 16:49 IST   |   Update On 2022-03-24 16:49:00 IST
பட்டா கணினி திருத்த முகாம் நடந்தது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்களாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு பட்டா கணினி திருத்த முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியகலா தலைமையில் நடைபெற்றது. 

முகாமில் பெயர் திருத்தம், உட்பிரிவு மாற்றம், விவசாய நிலம், வீட்டுமனை போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்காக 34 மனுக்கள் பெறப்பட்டு அதில் உடனடியாக 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

மீதம் உள்ள மனுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் இடத்தில் வருவாய்த்துறையினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 

டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்றசெயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர்களான ஆறுமுகம், சிவசங்கரி, அழகுமீனா, அழகம்மாள், ஜெயலட்சுமி, மற்றும் பணித் தள பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 

Similar News